Monday, May 13, 2024
Home » யாழ்.பல்கலையில் அரசறிவியலாளன் நூல் வெளியீட்டு விழா

யாழ்.பல்கலையில் அரசறிவியலாளன் நூல் வெளியீட்டு விழா

by Prashahini
April 4, 2024 2:53 pm 0 comment

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறையின், அரசறிவியல் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அரசறிவியலாளன் இதழ் – 6 நூல் வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது.

நேற்று (03) பிற்பகல் 3.00 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் அரசறிவியல் ஒன்றியத் தலைவர் சு.டிலக்சன் தலைமையில் இந்நூல் வெளியீட்டுவிழா இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குனராஜா, சிறப்பு விருந்தினராக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், கௌரவ விருந்தினராக அரசறிவியற்துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டர்.

அரசறிவியலாளன் இதழ் -6 நூலினை பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் கலைப்பீட பீடாதிபதி ஆகியோர் இணைந்து வெளியீட்டு வைத்தனர்.

யாழ்ப்பாணம் – பிரபாகரன் டிலக்சன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT