100
மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையரை மீட்குமாறு கோரி மகஜரொன்று மியன்மாருக்கு அனுப்பி வைக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள மகாநாயக்க தேரர்களால் மியன்மார் மகாநாயக்க தேரர்களுக்கு இந்த மகஜர் அனுப்பி வைக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மகஜரின்படி, மியன்மார் மகாநாயக்க தேரரின் ஊடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண மியன்மார் அரசாங்கம் தலையிடுமென்று எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.