136
ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தமை குறித்து விளக்கம் கோருவதற்காக மத்திய வங்கியின் அதிகாரிகள் எதிர்வரும் 05ஆம் திகதி மு.ப 10.30 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (01) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.