இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை (NGJA) மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் இணைந்து, ஆசியாவின் முதன்மையான 30ஆவது இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka இன் இறுதிநாளான (08) நேற்றைய தினமும் பல உள்நாட்டு, வெளிநாட்டு வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.
கடந்த சனிக்கிழமை (06) கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலின் ஆரம்பமான அங்குரார்ப்பண நிகழ்வில் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இக்கண்காட்சியின் இறுதிநாளான நேற்றைய தினம் சுமார் 45 வருடகாலம் மாணிக்க வியாபாரத்தில் ஈடுபட்டோர் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். பேருவளை , கொழும்பு, இரத்தினபுரி பகுதிகளைச்சேர்ந்த மாணிக்க வியாபாரிகள் உட்பட உள்ளூர் மற்றும் வெளியூர் இரத்தினக்கல் மற்றும் ஆபரண வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.
அஜ்வாத் பாஸி