இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2022 இல் நிட்டம்புவ நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸ் சார்ஜன்ட் ஜயந்த குணவர்தன ஆகியோரை நினைவுகூரும் நிகழ்வு நிட்டபுவவில் இன்று (09) இடம்பெற்றது.
பொதுஜன பெரமுனவின் இளைஞர் அமைப்பு மற்றும் பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த நினைவேந்தலை ஏற்பாடு செய்திருந்தன.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோருக்கு, இந்நிகழ்வில் கலந்து கொண்ட அரச கல்வி ஊழியர் சங்கத்தின் தலைவி திருமதி வசந்தா ஹந்தபான்கொட மற்றும் நிட்டம்புவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சந்தன குமார ஆகியோர் மலர்கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் எந்தவொரு ஶ்ரீ.ல.பொ.பெ. கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களோ பிரமுகர்களோ, பிரதிநிதிகளோ கலந்து கொள்ளவில்லை என எமது நிருபர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.