Monday, May 20, 2024
Home » மாணவர் வீசா விதிகளை மேலும் நெருக்கியது அவுஸ்திரேலியா

மாணவர் வீசா விதிகளை மேலும் நெருக்கியது அவுஸ்திரேலியா

by Gayan Abeykoon
May 9, 2024 4:32 pm 0 comment

சர்வதேச மாணவர் வீசாக்களுக்கான நிதித் தேவையை அவுஸ்திரேலியா கணிசமாக அதிகரித்துள்ளது. சாதனை அளவான குடியேற்றம் மற்றும் மாணவர்கள் மீதான சுரண்டல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் அமுலுக்கு வரும் புதிய விதியின்படி, வீசாவுக்கான தகுதிக்கு சர்வதேச மாணவர்கள் குறைந்தது 29,710 அவுஸ்திரேலிய டொலர் (19,576 அமெரிக்க டொலர்) சேமிப்பை காண்பிப்பது கட்டாயமாக்கப்படும்.

இது கடந்த ஏழு மாதங்களில் இடம்பெறும் இரண்டாவது அதிகரிப்பாகும். முன்னதாக கடந்த ஒக்டோபரில் 21,041 அவுஸ்திரேலிய டொலரில் இருந்து 24,505 அவுஸ்திரேலிய டொலர்களாக அதிகரிக்கப்பட்டது.

மாணவர் வீசா கட்டுப்பாட்டை தொடர்ந்து அதிகரித்து வரும் அவுஸ்திரேலியா கடந்த மார்ச்சில் அந்த வீசாவுக்கான ஆங்கில மொழித் தேவைகளை அதிகரித்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT