Home » ஹட்டனில் இறந்த நிலையில் சிறுத்தை உடல் மீட்பு

ஹட்டனில் இறந்த நிலையில் சிறுத்தை உடல் மீட்பு

by Prashahini
May 9, 2024 11:56 am 0 comment

ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள டிக்கோயா வனராஜா தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தை உடல் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தை ஹட்டன் பொலிஸ் பிரிவில் உள்ள வனராஜா தோட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள மாணாப்புல் பற்றையில் சுமார் 2 அடி நீளம் 1 அடி உயரம் கொண்ட சிறுத்தை இறந்த நிலையில் உள்ளதைக் கண்ட தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திடம் அறிவித்தனர்.

தோட்ட நிர்வாகி இது குறித்து ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து ஹட்டன் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்த நிலையில் இருந்த சிறுத்தையை பார்வையிட்ட பின்னர் இது குறித்து நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்திற்கு வன பாதுகாப்பு அதிகாரிகள் சென்று இறந்த நிலையில் இருந்த சிறுத்தையை மீட்டு ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர் – செ.தி.பெருமாள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT