Monday, May 20, 2024
Home » துபாயில் இனிய நந்தவனம் அறிமுகம்

துபாயில் இனிய நந்தவனம் அறிமுகம்

by Gayan Abeykoon
May 9, 2024 4:02 pm 0 comment

தமிழ் நாட்டின் திருச்சியிலிருந்து கடந்த 27 ஆண்டுகளாக வெளிவரும் இனிய நந்தவனம் மாத சஞ்சிகையின், துபாய் மக்களுக்கான அறிமுக விழா,  துபாய் அன்னபூரணா உணவகத்தில் (06) வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஹாசிம் உமர் பவுண்டேசன் ஏற்பாட்டில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆலோசகரும் இலக்கியப் புரவலருமான ஹாசிம் உமர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முனைவர் மு.ரா. ரோகிணி, பத்திரிகையாளர் முதுவை கிதாயத், துபாய் தொழிலதிபர் அப்துல் வஜீத், உளநல ஆலோசகர் ஃபஜிலா ஆசாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  இனிய நந்தவனம் பிரதம ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்று நிகழ்வை ஒழுங்குபடுத்தினார். துபாயில் கற்றல் கல்வி மேலாண்மை மையம் மூலமாக தமிழ் குழந்தைகளுக்கு தமிழ் மொழி மற்றும் தமிழ் பண்பாடுகளைக் கற்றுத்தரும் முனைவர் மு.ரா ரோகிணிக்கு “மொழிக்காவலர் என்ற விருதினை ஹாசிம் உமர் வழங்கி கௌரவித்தார். துபாய் வாழ் தமிழ் ஆர்வலர்கள். எழுத்தாளர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT