112
எம்பிலிப்பிட்டிய தனமல்வில பிரதேசத்தில் 15 வயது சிறுவனொருவனையும் அவரது தந்தையையும் காயப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனார்.
இச்சம்பவம் சர்வோதயா சந்தியில் நேற்று (27) இடம்பெற்றுள்ளது. இருவரையும் தாக்கியதாக கூறப்படும் இருவரில் ஒருவரை தனமல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவர்களில் இரண்டாவது சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் இவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் தெரிவித்தனர்.
(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)