Home » பாகங்களை இறக்குமதி செய்து இணைத்து மோட்டார் சைக்கிள் விற்பனை

பாகங்களை இறக்குமதி செய்து இணைத்து மோட்டார் சைக்கிள் விற்பனை

- 3 இடங்கள் சுற்றிவளைப்பு; 41 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

by Rizwan Segu Mohideen
April 26, 2024 2:24 pm 0 comment

– பெறுமதி ரூ. 2 கோடிக்கும் அதிகமென மதிப்பீடு

இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களைக் ஒன்றிணைத்து மோட்டார் சைக்கிள்களை செய்து விற்பனை செய்யும் 3 இடங்களை சுற்றிவளைத்த பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அங்கு 41 மோட்டார் சைக்கிள்களை மீட்டுள்ளனர்.

குருணாகல், வாரியபொல, மாஸ்பொத ஆகிய இடங்களில் உள்ள மூன்று மோட்டார் சைக்கிள் காட்சியறைகள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனையிட்ட பொலிசார், அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரி கிடைக்காத வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த மோசடியை கண்டுபிடித்துள்ளனர்.

48CC மற்றும் Mowad மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பெறுமதி சுமார் ரூ. 2 கோடிக்கும் (ரூ. 20 மில்லியன்) அதிகம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குருணாகல் பிரதேசத்தில் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்யும் வர்த்தகர் ஒருவர், மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்கள் என தெரிவித்து இவ்வாறு இறக்குமதி செய்து, ஒன்றிணைத்து குறித்த விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட 41 மோட்டார் சைக்கிள்களும் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள வாரியபொல மற்றும் குருணாகல் பொலிஸ் நிலையங்களில் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT