Sunday, May 19, 2024
Home » யாழில். 30 கி.கி கேரளா கஞ்சா மீட்பு; இருவர் கைது

யாழில். 30 கி.கி கேரளா கஞ்சா மீட்பு; இருவர் கைது

by Prashahini
May 6, 2024 2:37 pm 0 comment

வவுனியா பொலிஸாரினால் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் போதைப்பொருள் கைமாறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலைமையிலான பொலிஸ் பிரிவினர் இன்று (06) அதிகாலை திடீர் சோதனை நடவடிக்கையினை மருதங்கேணி பகுதியில் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 36, 35 ஆகிய வயதுடைய இரு நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவினை வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா ஆகியவை மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினருடன் இணைந்து மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினருடன் இணைந்து பல திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT