நண்பனுடன் முற்றத்தில் ஓட்டப்போட்டி ஓடிய 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரெகேவுல, தலகொலவெவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ரஸ்மிக தரிந்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (04) காலை, மற்றொரு நண்பருடன்,முற்றத்தைச் சுற்றி மரதன் போன்று ஓட்டப் போட்டியில் ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தனது தந்தையிடம் பல கிலோமீற்றர் தூரம் ஓடியது போல் களைப்பாக இருப்பதாக கூறி தரையில் அமர்ந்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் பேச்சு மூச்சின்றி இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குருணாகல் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் மாரடைப்பு காரணமாக அவரது மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொல்பித்திகம பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரபுத்த குலதுங்க தெரிவித்தார்.
இரண்டு பேர் கொண்ட குடும்பத்தில் இளையவரான ரஸ்மிக தரிந்துவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் தலகொலவெவ பொது மயானத்தில் இடம்பெற்றது.