154
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீநீலாயதக்ஷி அம்மன் சமேத ஸ்ரீ காயாரோஹணேஸ்வர சுவாமி ஆலய பஞ்சரத இரதோற்சவம் இன்று (06) காலை இடம்பெற்றது.
அதிகாலை விசேட அபிஷேகம், கொடித்தம்ப பூஜை என்பனவற்றை தொடர்ந்து காலை 7.00 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று தியாகராஜ சுவாமி உள்ளடங்கலாக பஞ்சமூர்த்திகள் இரதங்களில் ஆரோகித்து தொடர்ந்து பஞ்சரத பவனி இடம்பெற்றது.
யாழ். விசேட நிருபர்