மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி அகரம் பாலர் பாடசாலையின் தலைவர் செ.துஜியந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் கலந்து கொண்டார்.
ஆன்மீக அதிதியாக புதுக்குடியிருப்பு விக்னேஸ்வர் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ கோ.கிரிதரக்குருக்கள், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், விளையாட்டுக்கழக பிரதிநிதிகள், மாதர் சங்கங்களின் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். இங்கு முன்பள்ளி மாணவர்களின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள், உடற்பயிற்சி கண்காட்சி மற்றும் மாணவர்களின் கலைநிகழ்வுகள், பெற்றோருக்கான விளையாட்டுகள், பாடகர்களின் இசை விருந்து ஆகியன இடம்பெற்று அனைத்து முன்பள்ளி சிறார்களுக்கும் வெற்றிக் கிண்ணங்கள், பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
(பாண்டிருப்பு தினகரன் நிருபர்)