464
பண்டாரவளை பூனாகலை கபரகலையூரை சேர்ந்த இந்திரஜித் இந்திய தொலைக்காட்சி இசை போட்டி நிகழ்ச்சியில் தடம் பதித்து முதல்கட்ட குரல் தேர்வில் தெரிவாகி தனது திறமையை வெளிக்காட்டி நடுவர்களையும் இசை ரசிகர்களையும் வியப்படைய செய்துள்ளார்.
முன்னதாக, இலங்கையின் சக்தி தொலைக்காட்சியிலும் ஊவா வானலையிலும் தனது திறமையை நிருபித்த இந்திரஜித் இடைவிடாத தனது முயற்சியால் தற்போது இந்திய தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.