167
பதினெட்டு வயதுக்கு குறைந்த ஆண், பெண் பிள்ளைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை இணையத்தளங்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவேற்றும் நபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸார் விசேட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் சிறார்களுடன் தொடர்புடைய புகைப்படங்களை
வெளியிட்ட 10 சம்பவங்கள் பதிவாகியதுடன், கூகுள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 3 பேரை கைது செய்துள்ளதாகவும், பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.