சுதந்திரக் கட்சியிலிருந்து பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்ட தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை மீண்டும் கட்சியில் இணைப்பது தொடர்பாக ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீல.சு.க.வின் அரசியல் குழுக் கூட்டம் அக்கட்சியின் பதில் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் நேற்று முன்தினம் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற போதே மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் அமைச்சர்
மஹிந்த அமரவீர, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க ஆகியோர் அங்கம் வகிப்பதுடன், குழுவினருக்கு சட்ட ஆலோசனை வழங்குவதற்கான பொறுப்பு முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.