Monday, May 20, 2024
Home » கடலரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை
அம்பாறை மாவட்டத்தில்

கடலரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

by Gayan Abeykoon
May 9, 2024 5:45 am 0 comment

அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்தி கடலரிப்பிலிருந்தும் வெள்ள அபாயத்திலிருந்தும் அப்பிரதேசங்களை பாதுகாக்க பொலிஸார் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நாவிதன்வெளி, பொத்துவில், இறக்காமம், பாண்டிருப்பு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, மருதமுனை போன்ற பிரதேசங்களில் சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.   இதனால் கடற்கரை பிரதேசம் நாளாந்தம் கடலரிப்புக்குள்ளாகி வருகின்றது. அதுமட்டுமின்றி கடல்வாழ் உயிரினங்கள் அருகி வருவதுடன் மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாளிகைக்காடு குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT