56
எச்.ஐ.வி. பரிசோதனை மாதத்தை முன்னிட்டு இறக்காமம் இராணுவ படை வீரர்களுக்கான எச்.ஐ.வி/எயிட்ஸ் பரிசோதனை மற்றும் பாலியல் தொற்று நோய்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நேற்றுமுன்தினம் இறக்காமம் இராணுவ முகாமில் நடைபெற்றது.
கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புப்பிரிவின் ஏற்பாட்டில் அதன் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எல்.ஜலால்டீன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் சுகாதார மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்