Friday, May 10, 2024
Home » யாழில் கோர விபத்து; பாடசாலை மாணவன் பலி

யாழில் கோர விபத்து; பாடசாலை மாணவன் பலி

- மாட்டு வண்டி போட்டிக்காக மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி சம்பவம்

by Prashahini
August 14, 2023 11:34 am 0 comment

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவத்தில் கண்டுவில் வீதி சாவகச்சேரியை சேர்ந்த யாழ் இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயதான சிவபாலன் பிரவீன் என்ற மாணவனே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (13) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாட்டு வண்டி சவாரி போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச் சென்ற கனரக லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT