162
புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபர் மர்ஹூம் அஷ்ஷெய்க் எம்.எச்.எச்.எம்.முனிரது நினைவுகளை சுமந்து வரும் ‘நினைவுகளில் உஸ்தாத் முனீர்’ என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி, கல்வி மேம்பாட்டுக்கும் சீர்திருத்தத்துக்குமான புத்தளம் கல்வியியலாளர்களின் மன்றம் (PILLARS) மற்றும் உஸ்தாத் முனீரது நண்பர்கள் வட்டம் ஆகியன இணைந்து இந்த நூலை வெளியிட்டிருந்தன.
இந்நிகழ்வில் எழுத்தாளரும் ஆய்வாளருமான சிறாஜ் மசூர், புத்தளம் கல்விப் பணிமனையின் ஆங்கில பாட ஆசிரிய ஆலோசகர் ஏ.என்.எம்.எப்.ரிஸ்கியா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.