பிலிப்பைன்ஸ் நாட்டில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் 72 வயதில் சாதனை படைத்த முல்லைத்தீவைச் சேர்ந்த அகிலத்திருநாயகியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு முள்ளியவளை கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
அகிலத்திருநாயகி உள்ளிட்ட விருந்தினர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினத்தின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
2023 ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களையும் வெண்கல பதக்கத்தையும் விளையாட்டில் சாதனை படைத்துள்ளார். முள்ளியவளை மக்கள் சார்பாக ‘முல்லையின் வீரமங்கை’ என்ற பட்டம் வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர்(காணி) எஸ்.ஜெயகாந்தன், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட வைத்தியசாலை வைத்தியர் ச.சஞ்சிவினி, சட்டத்தரணி கு.கம்சன்,முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலய தலைவரும் சட்டத்தரணியுமான க.பரஞ்சோதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.