967
கண்டிக்கும், மாத்தளைக்கும் இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி நள்ளிரவு முதல் திங்கட்கிழமை 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை இடைநிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டிக்கும், கட்டுகஸ்தோட்டைக்கும் இடையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக புகையிரத சேவை நிறுத்தப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கண்டிக்கும், மாத்தளைக்கும் இடையில் தினமும் சுமார் 12 புகையிரதங்கள் இடம்பெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.