Home » மாத்தளைக்கான ரயில் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்

மாத்தளைக்கான ரயில் சேவை 03 நாட்களுக்கு இடைநிறுத்தம்

by Prashahini
August 14, 2023 12:08 pm 0 comment

கண்டிக்கும், மாத்தளைக்கும் இடையிலான புகையிரத சேவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி நள்ளிரவு முதல் திங்கட்கிழமை 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை இடைநிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டிக்கும், கட்டுகஸ்தோட்டைக்கும் இடையில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக புகையிரத சேவை நிறுத்தப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டிக்கும், மாத்தளைக்கும் இடையில் தினமும் சுமார் 12 புகையிரதங்கள் இடம்பெறுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT