போராட்டத்தால் இட்டுச் செல்லப்பட்ட நாட்டின் அரசியல் பயணத்தை சரியான வழியில் திசை திருப்பி சிறந்த நாடொன்றை மக்களுக்கு வழங்கியமைக்காக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நல்வாழ்த்து அறிக்கையொன்று சுதந்திர தொழிற்சங்கங்களின் புதிய கூட்டணி கேந்திர நிலையத்தினால் நேற்று கையளிக்கப்பட்டது.
அத்தோடு கொழும்பு நகரின் ஜந்து இடங்களில் தொழிற்சங்க கேந்திர நிலையத்தின் பிரதிநிதிகள் ஒன்று கூடி, பாதுகாப்பு படையினருக்கு பூச்செண்டுகளை வழங்கி நன்றியும் தெரிவித்தனர். அதன் பின்னர், தொழிற்சங்கங்கள் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் பத்துப் பேர் ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்று ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளித்தனர்.
அதன்பின்னர் ஒன்றிணைந்த தொழிற்சங்க கேந்திர நிலையத்தில் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்..