66
மட்டக்களப்பு தேசிய கல்வி கல்லூரியில் ‘உதிரம் கொடுத்து உயிர் காப்போம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இரத்ததான நிகழ்வு நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு தேசிய கல்வி கல்லூரியின் கல்வியும் தர மேம்பாட்டுக்கும் பொறுப்பான உப பீடாதிபதி மணிவண்ணன் தலைமையில் இரத்ததான நிகழ்வு நடைபெற்றதுடன், இதில் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், விரிவுரை இணைப்பாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்குபற்றி இரத்ததானம் வழங்கினர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் இரத்தக் கையிருப்பு குறைந்தளவில் உள்ளதை அறிந்துகொண்ட மட்டக்களப்பு தேசிய கல்வி கல்லூரியினர், இந்த இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
புதிய காத்தான்குடி தினகரன், மட்டக்களப்பு குறூப் நிருபர்கள்