65
மட்டக்களப்பின் பதூரியா நகரை வசிப்பிடமாக கொண்ட ஒருவர், காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொலன்னறுவையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி இவர் சென்று கொண்டிருந்த போது, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கானார்.
இந்நிலையில் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாளிகைக்காடு குறூப் நிருபர்