Tuesday, April 30, 2024
Home » இலங்கை அணியின் உலக கிண்ண அட்டவணை உறுதி

இலங்கை அணியின் உலக கிண்ண அட்டவணை உறுதி

by admin
July 4, 2023 9:45 am 0 comment

இலங்கை அணியின் போட்டி அட்டவணை

எதிர் தென்னாபிரிக்கா, டெல்லி, ஒக்டோபர் 07

எதிர் பாகிஸ்தான், ஹைதராபாத், ஒக்டோபர் 12

எதிர் அவுஸ்திரேலியா, லக்னோவ், ஒக்டோபர் 16

எதிர் தகுதி 1, லக்னோவ், ஒக்டோபர் 21

எதிர் இங்கிலாந்து, பெங்களுர், ஒக்டோபர் 26

எதிர் ஆப்கானிஸ்தான், பூனே, ஒக்டோபர் 30

எதிர் இந்தியா, மும்பை, நவம்பர் 02

எதிர் பங்களாதேஷ், டெல்லி, நவம்பர் 06

எதிர் நியூசிலாந்து, பெங்களுர், நவம்பர் 09

உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றிருக்கும் இலங்கை அணி உலகக் கிண்ணத்தில் தனது முதல் போட்டியில் வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி தென்னாபிரிக்காவை எதிர்கொள்ளவுள்ளது.

சிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் பங்கேற்றுள்ள இலங்கை அணி இதுவரை ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றியீட்டி முதல் அணியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளது.

உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கை அணிக்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மற்றுமொரு சுப்பர் சிக்ஸ் போட்டி மற்றும் வரும் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெறவுள்ள இறுதிப் போட்டி எஞ்சி இருந்தபோதும் அந்த அணி உலகக் கிண்ணத்தில் ஆடவுள்ள போட்டி அட்டவணை உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகளே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும் என்ற நிலையில் அதில் இலங்கை தகுதி பெறும் நிலையில் ‘தகுதி 2’ நிலையிலேயே உலகக் கிண்ணத்தில் ஆடும்.

ஏற்கனவே மேற்கிந்திய தீவுகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற தவறி இருக்கும் நிலையில் இரண்டாவது அணியாக தகுதி பெறுவதற்கு சிம்பாப்வே மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை உலகக் கிண்ணத்தில் பத்து அணிகளே பங்கேற்றிருக்கும் நிலையில் ரவுன்ட் ரொபின் அடிப்படையில் ஒவ்வொரு அணியும் மற்ற ஒன்பது அணிகளுடன் ஆரம்ப சுற்றில் மோதும். இதில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும். உலகக் கிண்ண இறுதிப் போட்டி நவம்பர் 19 ஆம் திகதி அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ண ஆரம்பப் போட்டி ஒக்டோபர் 05 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

இதில் டெல்லியில் முதல் போட்டியில் ஆடும் இலங்கை தொடர்ந்து ஹைதராபாத் செல்லவுள்ளது. இந்நிலையில் லக்னோவில் இரண்டு போட்டிகளுக்காக தங்கியிருக்கும் இலங்கை அணியினர் பின்னர் பெங்களுர் மற்றும் பூனேவில் மற்ற இரண்டு போட்டிகளிலும் ஆடும். தொடர்ந்து போட்டியை நடத்தும் இந்தியாவுக்கு எதிராக மும்பையில் வரும் நவம்பர் 2 ஆம் திகதி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்நிலையில் டெல்லிக்கு திரும்பும் இலங்கை அணி தனது கடைசி ரவுன்ட் ரொபின் சுற்றுப் போட்டியில் நியூசிலாந்து அணியை நவம்பர் 9 ஆம் திகதி பெங்களுரில் எதிர்கொள்ளவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT