Home » எல்.பி.எல். ஏலத்திற்கு 400 வெளிநாட்டு வீரர்கள் பதிவு

எல்.பி.எல். ஏலத்திற்கு 400 வெளிநாட்டு வீரர்கள் பதிவு

by damith
April 29, 2024 10:41 am 0 comment

இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பாபர் அஸாம், ஷஹீன் ஷா அப்ரிடி, ஜேம்ஸ் நீஷம், டிம் சௌதி மற்றும் இஷ் சோதி உட்பட 400க்கும் அதிகமான சர்வதேச வீரர்கள் பதிவு செய்துள்ளனர். வீரர்கள் பதிவு இன்றுடன் (29) நிறைவடையவுள்ள நிலையில் வீரர்கள் ஏலத்திற்கான பட்டியல் ஏற்பாட்டாளர்களால் சுமார் 150 ஆக குறைக்கப்படவுள்ளது. வீரர்கள் ஏலம் எதிர்வரும் மே 16 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற வாய்ப்பு உள்ளது. வீரர்கள் பதிவு கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்த போதும் கோரிக்கை காரணமாக அது திங்கட்கிழமை (இன்று) வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையாக பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ், தென்னாபிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் தவிர 23 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் உட்பட 120 உள்ளூர் வீரர்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளது. இவர்கள் ஐந்து அணிகளுக்காக ஏலத்தில் விடப்படவுள்ளனர். ஐந்தாவது லங்கா பிரீமியர் லீக் தொடர் எதிர்வரும் ஜூலை 1 தொடக்கம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 24 போட்டிகள் இடம்பெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT