ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் நப்லுஸ் மாகாணத்தில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் துப்பாக்கிச் சூட்டில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆயுதங்களுடன் வந்த சுமார் 50 குடியேற்றவாசிகள் கடந்த திங்கட்கிழமை (15) கிழக்கு அக்ரபா பகுதியில் கிர்பாத் அல் டாவில் கிராமத்தின் குடியிருப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அக்ரபா மேயர் சலா பானி ஜாபர் தெரிவித்துள்ளார்.
‘அங்கே இஸ்ரேலிய படையினர் குடியேற்றவாசிகளின் செயலை பார்த்தபடி சும்மா இருந்தனர்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குக் கரையில் குடியேற்றவாசிகளின் வன்முறைகள் அதிகரித்திருப்பதோடு கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் குறைந்தது ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா போரை அடுத்து இந்த வன்முறைகள் தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.