தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அனுசரணையில் தேசியரீதியில் ஸ்மார்ட் யூத் இளைஞர் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா தேசியரீதியில் நடைபெற்றது.
அதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று தம்மரெத்தின சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் நேற்று பிற்பகல் வேளையில் ஸ்மார்ட் யூத் இளைஞர் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் த.கஜேந்திரனின் ஆலோசனைக்கமைய இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் இளைஞர் சேவை மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் எச்.யு.சுசந்த பிரதமஅதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட உதவிப்பணிப்பாளர் யு.எல்.மஜீட் மற்றும் இளைஞர் சேவை மன்றத்தின் பொறுப்பதிகாரி ஏ.ஹமீர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கிராம நிர்வாக அலுவலர் பரிமளவாணி, சில்வெஸ்டர் இளைஞர் சேவை மன்ற உறுப்பினர்கள் யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்விற்கு வருகை தந்த பிரதம அதிதி போட்டி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.
திராய்க்கேணி தினகரன் நிருபர்