பேருவளை பிரதேச சபை பிரதேசத்திற்குட்பட்ட தர்கா நகர் பிரதேச ஸாவியா வீதி, இஸ்னாபுல்ல ஆகிய இரு வீதிகளும் காபட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளன.
பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே மேற்படி இரு வீதிகளும் காபட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளதோடு அதற்கான நிதியும் அமைச்சரினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வீதிகளின் புனரமைப்பு பணிகள் விரைவில் அமைச்சர் பந்துல குணவர்தனவின் பங்குபற்றலுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, பேருவளை நகர சபை பிரதேசத்திலுள்ள மருதானை பகுதியின் மூன்று வீதிகளும் மஹகொடை பிரதேசத்தின் மூன்று வீதிகளும் சீனன்கோட்டை பிரதேசத்தின் இரண்டு வீதிகளுமாக சுமார் 08 வீதிகளுக்கு காபட் இடும்பணிகளுக்கு அமைச்சர் பந்துல குணவர்தனவின் பூரண அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதோடு அதனையும் வெகுவிரைவில் ஆரம்பித்து வைக்க தான் உத்தேசித்துள்ளதாகவும் மர்ஜான் பளீல் எம்.பி மேலும் தெரிவித்தார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தனது பாராளுமன்ற பதவிக்காலத்திற்குள் என்னால் முடியுமான உதவிகளை தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர், அமைச்சர்களின் உதவியோடு தனது பிரதேசத்தில் முன்னெடுப்பேன் எனவும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்தார்.