Tuesday, April 30, 2024
Home » புதுவருட பாடலை திரிபுபடுத்தி வெளியிட்டதாக கைது

புதுவருட பாடலை திரிபுபடுத்தி வெளியிட்டதாக கைது

- 31 வயது சந்தேகநபர் ஒரு மதுவரி ஊழியர்

by Rizwan Segu Mohideen
April 17, 2024 9:26 am 0 comment

புதுவருடம் தொடர்பில் பிரபல சிங்களப் பாடகர் ரோஹண பெத்தகே பாடிய பாடலை திரிபுபடுத்தி, கேலியாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் மாஅதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய, பொலிஸ் கணனி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண பிரிவு அதிகாரிகளால் நேற்றையதினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலாத்துஒய பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான குறித்த சந்தேகநபர், மதுவரித் திணைக்கள ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்றையதினம் (17) குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கணனி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT