சமுர்த்தி தேசிய சித்திரைப் புத்தாண்டு விழா களுத்துறை மாவட்டத்தில் ஹொரண பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான புத்த சமய விவகார கலாசார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் பெஸ்குவல் ஆகியோர் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர். பாரம்பரிய புத்தாண்டு பண்பாட்டு கலை கலாசாரங்களை பிரதிபலிக்கும் விளையாட்டு போட்டிகளும் இடம்பெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. சமூக வலுவூட்டல் அமைச்சின் மேலதிக செயலாளர் நாலிகா பியசேன, சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் ஸீ.டீ. களுஆரச்சி, பிரதேச செயலாளர்கள், களுத்துறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் நிசன்சலா பெரேரா உள்ளிட்ட அரச நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பாணந்துறை மத்திய குறூப் நிருபர்