120
பாணந்துறை, பின்வத்த பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் பாணந்துறை மற்றும் பின்வத்த பிரதேசத்தை சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்தனர்.
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதால், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.