65
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பெரியபாலம் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (09) நடைபெற்றதுடன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இப்புதிய கட்டடத்தை திறந்து வைத்துள்ளார்.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஹில்மி முகைதீன் பாவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
தம்பலகாமம் குறூப் நிருபர்