119
இருபதாயிரம் மில்லிலீற்றர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு மூதூர் நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை அபராதம் விதித்துள்ளது.
திருகோணமலையின் சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சந்தேக நபர் கசிப்புடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறும் அந்நபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தோப்பூர் குறூப் நிருபர்