சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தினத்தை முன்னிட்டு இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினுடைய காத்தான்குடி பிரிவின் ஏற்பாட்டில் ஆயுர்வேத மருத்துவ முகாம், இலங்கை செஞ்சிலுவைச் சங்க காத்தான்குடி பிரிவு காரியாலயத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட புதுக்குடியிருப்பு ஆயுர்வேத சித்த வைத்தியசாலையால் இந்த ஆயுர்வேத மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட புதுக்குடியிருப்பு ஆயுர்வேத சித்த மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஆயிஷா பயாஸ் தலைமையிலான வைத்தியர்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மக்களுக்கு சிகிச்சை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், மருந்துகளையும் இலவசமாக வழங்கி வைத்தனர். இதன் ஆரம்ப வைபவம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவு தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்றது. இதில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மரக்கன்றுகள் நடுகையும் இடம்பெற்றது.
புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்