124
இணையத்தளம் மூலம் தனிநபர்களால் மேற்கொளப்படும் பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வோர் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியை பெற்றுக்கொள்ள முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
[email protected] என்ற மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடு செய்வதன் மூலம் பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறான முறைப்பாடுகளை 24 மணி நேரமும் செயல்படும் 109 என்ற சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அவசர அழைப்பு மூலமாகவும் மேற்கொள்ள முடியும்.
முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொள்ளும்.