116
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பசுந்து குணரட்ன தலைமையிலான குழுவினர், அண்மையில் அட்டாளைச்சேனைக்கு விஜயம் செய்து இளைஞர்களை வலுவூட்டுவது தொடர்பில் கலந்துரையாடினர்.
அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி காரியாலயத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது,தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் பசுந்து குணரட்னவின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)