Thursday, May 9, 2024
Home » யாழில்.சட்டவிரோத மதுபானத்துடன் கைதான பெண்

யாழில்.சட்டவிரோத மதுபானத்துடன் கைதான பெண்

- 25,000 ரூபாய் தண்டம் விதிப்பு

by Prashahini
February 22, 2024 5:51 pm 0 comment

சட்டவிரோத மதுபானத்துடன் கைதான பெண்ணுக்கு 25,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியில் வைத்து 1500 மில்லி லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் பெண்ணொருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண்ணை விசாரணைகளுக்கு பின்னர் பொலிஸார் நேற்று (21) மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, மன்றில் பெண் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , கடுமையாக எச்சரித்த மன்று , 25,000 ரூபாய் தண்டம் விதித்தது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT