Monday, May 20, 2024
Home » மருமகனின் தாக்குதலில் மாமன் உயிரிழப்பு

மருமகனின் தாக்குதலில் மாமன் உயிரிழப்பு

by Gayan Abeykoon
May 8, 2024 9:00 am 0 comment

வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, மதுராநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் இருவருக்குமிடையில் நீண்டநாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளன.

இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய மாமன் மீது மருமகன் கோடாரியால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாமனாரை உறவினர்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்ற போதும் அவர் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய மோகன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை கொண்டு வருகின்றனர்.

(வவுனியா விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT