Monday, May 20, 2024
Home » திருநெல்வேலி வர்த்தகருக்கு ஒரு இலட்சத்து ரூ. 50 ஆயிரம் அபராதம்

திருநெல்வேலி வர்த்தகருக்கு ஒரு இலட்சத்து ரூ. 50 ஆயிரம் அபராதம்

by Gayan Abeykoon
May 8, 2024 9:01 am 0 comment

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் உரிமையாளருக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத குற்றச்சாட்டின் கீழ் கடந்த மார்ச் மாதம் 18ஆம் திகதி உரிமையாளருக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன, நேற்றைய தினம் உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

(கரவெட்டி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT