131
பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பொலிஸார் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(26) நள்ளிரவு பருத்தித்துறை நான்காம் குறுக்கு தெருப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைநடவடிக்கையின் போது 40 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 27 வயதுடைய நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேபோன்று கலட்டிப் பகுதியில் 80 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 29 வயதுடைய நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாகர்கோவில் விஷேட நிருபர்