வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் வீடு உடைத்து நகைகள், ரொக்கப் பணம் என்பன திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் துரித விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன் மூன்று நாட்களில் பிரதான சந்தேகநபர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 19 பவுண் தங்கநகை மற்றும் ஐந்து இலட்சம் ரூபா ரொக்கப்பணம் என்பன திருடப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
இதுதொடர்பில் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சந்தனகமகே தலைமையிலான பொலிஸ் குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.
இதனையடுத்து பிரதான சந்தேகநபர் புதுக்குடியிருப்பு சந்தியில் வைத்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (26) கைது செய்யப்பட்டதுடன் மேலும் பெண் ஒருவர் உட்பட ஆறுபேர் மன்னார், புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர்களிடமிருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தனர்.
நாகர்கோவில் விசேட நிருபர்