இராஜாங்கனை பகுதியில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு மதன மோதக குளிகை விநியோகம் செய்த இராஜாங்கனை 05 ம் கட்டை பகுதியைச் சேர்ந்த வியாபார நிலைய உரிமையாளர் ஒருவரை 1175 மதன மோதக குளிகைகளுடன் (25) பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 01 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இராஜாங்கனை 05ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த கே.கே. ஜீவந்த ஜயந்த என்பவரே இவ்வாறு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இராஜாங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரை மதன மோதக குளிகையுடன் கைது செய்துள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காக கொண்டு குறித்த வியாபார நிலையத்தில் 200 மற்றும் 300 ரூபாவிற்கு மதன மோதக குளிகை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்