Monday, April 29, 2024
Home » யுக்திய திடீர் சுற்றிவளைப்பில் மன்னாரில் 70 பேர் கைது

யுக்திய திடீர் சுற்றிவளைப்பில் மன்னாரில் 70 பேர் கைது

by Gayan Abeykoon
December 28, 2023 8:26 am 0 comment

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ‘யுக்திய’ திடீர்சுற்றிவளைப்பில் மன்னார் மாவட்டத்தில் 70 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடுமுழுவதும் கடந்த வாரம் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 27.6 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதுடன் 06 வழக்குகளும், 28.01 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் 13 வழக்குகளும் ,கஞ்சா 160.47 கிராம் கைப்பற்றப்பட்டதுடன் 29 வழக்குகளும், மாவா போதைப்பொருள் 386 கிராம் கைப்பற்றப்பட்டதுடன் 3 வழக்குகளும் டொபி மாதிரி கொண்ட மதகமொத என்ற போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் ஒரு வழக்கும் சட்டபூர்வமற்ற முறையில் 280 சிகரட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரு வழக்குமாக மொத்தமாக 70 சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் மன்னார் மற்றும் அடம்பன் பகுதியிலேயே அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

தலைமன்னார் விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT