முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற 5 பேர் கொண்ட இளைஞர் குழுவினர் இன்று (28) மாலை கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது ஒரு இளைஞன் கடலில் நீர் இழுத்துச் சென்றுள்ளதை தொடர்ந்து காப்பாற்ற முற்பட்ட மற்றொரு இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார்.
நாயாறு கடற் படையினரின் உதவியுடன் ஒரு இளைஞன் உயிருடன் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞன் நாயாறு கடலில் மூழ்கிய நிலையில் அவரை தேடு நடவடிக்கை இன்று மாலை வரை முன்னெடுக்கப்பட்ட நிலையில் மீட்கப்படவில்லை.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போய் உள்ளதுடன் குறித்த நபர் திருகோணமலை சேர்ந்தவராவார்.
இவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீரில் மூழ்கி காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் கடப்படையினர் மற்றும் பிரதேச இளைஞர்கள் முன்னெடுத்துள்ளார்கள்.
புதுக்குடியிருப்பு விசேட நிருபர்