233
மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக கடலட்டை எடுத்துச் சென்ற இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை (11) மன்னாரில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை (கடல் வெள்ளரி) கொண்டு சென்றுள்ளனர். இதன்போதே பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் நகருக்குள் ஒரு முச்சக்கர வண்டியை சோதனையிட்டபோதே 49 கடலட்டைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விரு சந்தேகநபர்களும் மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தலைமன்னார் விஷேட நிருபர்