Thursday, May 9, 2024
Home » யாழில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

யாழில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

by Prashahini
September 8, 2023 4:32 pm 0 comment

யாழ்ப்பாணம் – பலாலி கிழக்கு பகுதியில் இன்று (08) வெள்ளிக்கிழமை குளவி கொட்டுக்கு இலக்காகி 05பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த ஐவரும் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வருவதனால் மரங்களில் இருந்த குளவிக்கூடு கலைந்து குளவிகள் கூண்டில் இருந்து வெளியேறி தாக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

யாழ்.விசேட நிருபர்

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT