1.3K
பொலன்னறுவை – ஹிங்குராக்கொட ஆரம்ப பாடசாலையில் குளவி கொட்டுக்கு இலக்கான 48 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (10) முற்பகல் பாடசாலை வளாகத்தில், இருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்களில் 45 பேர் பாடசாலை மாணவர்களாவர்.
அவர்கள் அனைவரும் ஹிங்குராக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.